Viewing:

சங் Psalms 146

Select a Chapter

சங்கீதம் 146

1அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,

யெகோவாவை துதி.

2நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்;

நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.

3பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.

4அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்;

அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.

5யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து,

தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

6அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்;

அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.

7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;

பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்;

கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.

8குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்;

விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார்.

நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.

9அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்;

அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்;

துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.

10யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்;

சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார்.

அல்லேலூயா.