Viewing:

சங் Psalms 6

Select a Chapter

சங்கீதம் 6

செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

1யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும்,

உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.

2என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே,

நான் பெலனில்லாமல் போனேன்;

என்னைக் குணமாக்கும் யெகோவாவே,

என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.

3என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே,

எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.

4திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்;

உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.

5மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை,

பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?

6என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்;

இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி,

என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.

7துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது,

என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.

8அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;

யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.

9யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்;

யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.

10என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்;

அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.