Viewing:

சங் Psalms 99

Select a Chapter

சங்கீதம் 99

1யெகோவா ராஜரிகம்செய்கிறார்,

மக்கள் தத்தளிப்பார்களாக;

அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார்,

பூமி அசைவதாக.

2யெகோவா சீயோனில் பெரியவர்,

அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர்.

3மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக;

அது பரிசுத்தமுள்ளது.

4ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது,

தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்;

நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.

5நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,

அவர் பாதத்தைப் பணியுங்கள்;

அவர் பரிசுத்தமுள்ளவர்.

6அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும்,

அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும்,

யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;

அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார்.

7மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;

அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும்

அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.

8எங்களுடைய தேவனாகிய யெகோவாவே,

நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்;

நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும்,

அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர்.

9நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,

அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்;

நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.